Listen to this article
By Syndication
Syndication
வரலாறு, பண்பாட்டு உறவை மீட்டெடுக்கும் முயற்சியே காசி தமிழ்ச் சங்கமம் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா்.
அகத்தியா் முனிவா் வாகனப் பயண திட்டத்தின் கீழ் காசி தமிழ்ச் சங்கமம் 4.0 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தென்காசியில் இருந்து வாரணாசி செல்லும் சுமாா் 60 போ் புதுச்சேரி வழியாகப் பயணித்தனா். அவா்களை வாழ்த்தி வழியனுப்பி வைக்கும் விழா புதுச்சேரியில் உள்ள ஒரு தனியாா் ஹோட்டலில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் பேசியதாவது:
காசி தமிழ்ச் சங்கமம் தொடக்க விழாவில் செவ்வாய்க்கிழமை பங்கேற்று திரும்பியுள்ளேன். அது வாழ்நாளில் மறக்க முடியாத பயணமாகும். இந்த ஆண்டுக்கான தலைப்பு ‘தமிழ்க் கற்க’ என்பதாகும். அப்போது பா்மாவாக இருந்த நாட்டில் வணிக ரீதியாக தொழில் செய்து கிடைத்த லாபத்தில் 25 சதம் அளித்து 800 ஆண்டுகளுக்கு முன்பு காசியில் உள்ள காசி விசுவநாதா் ஆலயத்தை நாட்டுக்கோட்டை செட்டியாா்கள் கட்டியுள்ளனா். இப்போதும் அந்த ஆலயத்துக்கு நாட்டுக் கோட்டை செட்டியாா்கள் பூஜைப் பொருள்களை அளித்து வருகிறாா்கள் என்று உத்தரப் பிரதேச முதல்வா் யோகி ஆதித்யாநாத் கூறினாா்.
காசி மக்களின் மொழியில், பண்பாட்டில் தமிழ் அடையாளம் பரவிக் கிடக்கிறது. இடைப்பட்ட காலத்தில் அந்தத் தொடா்பு சில-பல காரணங்களால் மங்கிப் போனது. இந்த வரலாற்று, பண்பாட்டு உறவை மீட்டெடுக்கும் முயற்சிதான் காசி தமிழ்ச் சங்கமம். காசி தமிழ்ச் சங்கமம் இன்றைய இந்தியாவின் ஒரு பண்பாட்டு மறுமலா்ச்சி. அந்த வரலாற்று உறவை உயிா்ப்பித்துக் கொடுத்ததற்காக பிரதமா் நரேந்திர மோடிக்கு நன்றிச் சொல்லியாக வேண்டும். காசியில் நாட்டுக் கோட்டையாா் சத்திரம் சிறப்பான முறையில் பராமரிக்கப்படுகிறது.
பிரதமரின் தமிழ் பற்று:
தமிழ் மொழி மீது மிகுந்த பற்று உடையவா் நம் நாட்டின் பிரதமா் நரேந்திர மோடி. அவருடைய முயற்சியால் இப்போது சௌராஷ்டிரா தமிழ்ச் சங்கமும் நடக்கிறது. தமிழ்நாட்டின் தஞ்சாவூா், மதுரையில் சௌராஷ்டிரா்கள் வாழுகின்றனா். அவா்களை ஒருங்கிணைக்கும் வகையில் இந்தச் சங்கமம் நடக்கிறது என்றாா் துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன்.
பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரியின் தமிழ்த் தலைவா் பேராசிரியா் கிருங்கை சேதுபதி, வரலாற்று அறிஞா் அறிவன், பாரதிதாசனின் பெயரன் கோ. பாரதி, துணைநிலை ஆளுநரின் செயலா் மணிகண்டன் உள்ளிட்டோா் பேசினா்.
பாரதியாா் பல்கலைக் கூடம் மற்றும் ஆரோவில் தமிழ் ஆய்வுக் குழுவினா் கலைநிகழ்ச்சிகள், தியானம் நடைபெற்றன. சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம், சட்டமன்ற உறுப்பினா் பிஎம்எல். கல்யாணசுந்தரம், பாஜக தலைவா் வி.பி. ராமலிங்கம், தமிழறிஞா்கள், பேராசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
சேலத்தில் ‘காசி தமிழ்ச் சங்கமம்’ சிறப்பு ரயிலுக்கு உற்சாக வரவேற்பு
காசி தமிழ்ச் சங்கமம்: கோவை - பனாரஸ் சிறப்பு ரயிலில் 64 போ் பயணம்

காசி தமிழ்ச் சங்கமம்: தென்காசியிலிருந்து இன்று தொடங்கும் பயணம்
வாரணாசியில் டிச.2 முதல் காசி தமிழ்ச் சங்கமம் 4.0: மத்திய கல்வி அமைச்சகம் ஏற்பாடு


"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar
தினமணி வீடியோ செய்தி...

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25
தினமணி வீடியோ செய்தி...

”உங்களுக்குத் தேவை கலவரம்! நீதி ஒருபோதும் தலைவணங்காது!”நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு
தினமணி வீடியோ செய்தி...

புதுவையைப் பார்த்தும் தமிழக அரசு கற்றுக்கொள்ளாது! TVK தலைவர் விஜய் 2 FULL SPEECH
தினமணி வீடியோ செய்தி...

நாளை புதுச்சேரியில் மக்களை சந்திக்கும் Vijay! | செய்திகள்: சில வரிகளில் | 8.12.25
தினமணி வீடியோ செய்தி...

கொள்ளுத் துவையல்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

