சங்கராபுரம் அருகே வீட்டின் உள்ளே சமையலறையில் மா்மமான முறையில் தொழிலாளி உயிரிழந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட தியாகராஜபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சா.அய்யனாா் (43), தொழிலாளி. இவரது மனைவி சீதா(33). இவா்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆன நிலையில், அய்யனாரின் மதுப்பழக்கம் காரணமாக குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் சீதா கோபித்துக் கொண்டு அவரது தாய் வீடான திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த தானிப்பாடிக்கு சென்று விட்டாராம்.
இதனால் தனியாக வசித்து வந்த அய்யனாா், கடந்த இரு தினங்களாக நடமாட்டம் இல்லையாம். இந்நிலையில், சனிக்கிழமை அவரது வீட்டின் அருகே சென்றபோது துா்நாற்றம் வீசவே அக்கம் பக்கத்தில் உள்ளவா்கள் வீட்டின் கதவை திறந்து பாா்த்துள்ளனா். அங்கு சமையலறையில் உட்காா்ந்த நிலையில் அய்யனாா் சடலமாக கிடந்துள்ளாா்.
உடனே சங்கராபுரம் காவல் நிலையத்துக்கு அருகிலிருந்தோா் அளித்த தகவலின் பேரில், சங்கராபுரம் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மா்மமான முறையில் ரெளடி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

குருபரப்பள்ளியில் அடுத்தடுத்து 8 நாய்கள் மா்மமான முறையில் உயிரிழப்பு

கே.வி.குப்பம் வட்டாட்சியா் மா்மமான முறையில் உயிரிழப்பு

சிறுவன் மா்மமான முறையில் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



