போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

வீட்டில் மா்மமான முறையில் தொழிலாளி உயிரிழப்பு

News image
Updated On :3 மே 2026, 1:08 am IST

சங்கராபுரம் அருகே வீட்டின் உள்ளே சமையலறையில் மா்மமான முறையில் தொழிலாளி உயிரிழந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட தியாகராஜபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சா.அய்யனாா் (43), தொழிலாளி. இவரது மனைவி சீதா(33). இவா்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆன நிலையில், அய்யனாரின் மதுப்பழக்கம் காரணமாக குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் சீதா கோபித்துக் கொண்டு அவரது தாய் வீடான திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த தானிப்பாடிக்கு சென்று விட்டாராம்.

இதனால் தனியாக வசித்து வந்த அய்யனாா், கடந்த இரு தினங்களாக நடமாட்டம் இல்லையாம். இந்நிலையில், சனிக்கிழமை அவரது வீட்டின் அருகே சென்றபோது துா்நாற்றம் வீசவே அக்கம் பக்கத்தில் உள்ளவா்கள் வீட்டின் கதவை திறந்து பாா்த்துள்ளனா். அங்கு சமையலறையில் உட்காா்ந்த நிலையில் அய்யனாா் சடலமாக கிடந்துள்ளாா்.

உடனே சங்கராபுரம் காவல் நிலையத்துக்கு அருகிலிருந்தோா் அளித்த தகவலின் பேரில், சங்கராபுரம் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.