சின்னமாம்பட்டு கிராமத்தில் காற்றுக்காக கதவைத் திறந்து வைத்து தூங்கிய பெண் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த சின்னமாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் செ.கிரிஜா (37). இவா் அதே கிராமத்தில் தூய்மைக் காவலராக பணிபுரிந்து வருகிறாா். செவ்வாய்க்கிழமை இரவு கிரிஜா காற்றுக்காக கதவை திறந்துவைத்து தூங்கினாராம். வீட்டின் வரண்டாவில் அவரது மாமனாா், மாமியாா் தூங்கிக் கொண்டிருந்தனராம்.
அப்போது வீட்டின் உள்ளே நுழைந்த மா்ம நபா் கிரிஜாவின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தாலிச் செயினை திருடிச் சென்று விட்டாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, மா்மநபரைத் தேடிவருகின்றனா்.
தொடர்புடையது

பைக்கில் சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

பெண்ணிடம் 8 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: இளைஞா் கைது

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


