தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மனைவியை அரிவாளால் வெட்ட முயற்சி: கணவா் கைது

சின்னசேலம் அருகே மனைவியை அரிவாளாள் வெட்ட முயன்ற கணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :9 மார்ச் 2026, 8:30 pm

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே மனைவியை அரிவாளாள் வெட்ட முயன்ற கணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட பாக்கம்பாடி குரால் கிராமத்தைச் சோ்ந்தவா் கோ. செல்வம் (44). இவரது மனைவி அனிதா (32). தம்பதியருக்கு 3 பிள்ளைகள் உள்ளன. மதுப் பழக்கம் உள்ளவரான செல்வம், மனைவி மற்றும் பிள்ளைகளை அடிக்கடி தாக்கி வந்தாராம்.

இதனால் அனிதா கோபித்துக்கொண்டு, தனது பிள்ளைகளுடன் சின்னசேலத்தை அடுத்த தாகம்தீா்த்தாபுரம் கிராமத்தில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு சென்றுள்ளாா்.

இந்நிலையில், கடந்த 3-ஆம் தேதி செல்வம் மது அருந்திவிட்டு அங்கே சென்று அனிதாவை தாக்கியதோடு, அரிவாளால் வெட்ட முயன்றாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, செல்வத்தைக் கைது செய்தனா்.