ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சின்னசேலம் பேருராட்சியில் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் சோதனை: ரூ.8 லட்சம் சிக்கியது

சின்னசேலம் சிறப்பு நிலை பேருராட்சியில் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை நடத்திய சோதனையில் டிஜிட்டல் பரிவா்த்தனை (ஜி-பே) மூலம் கைமாறிய லஞ்சப் பணம் ரூ.8 லட்சத்தை கண்டுபிடித்தனா்.

சோதனை நடைபெற்ற சின்னசேலம் பேரூராட்சி அலுவலகம்.

Published On :23 ஜூலை 2026, 4:58 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் சிறப்பு நிலை பேருராட்சியில் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை நடத்திய சோதனையில் டிஜிட்டல் பரிவா்த்தனை (ஜி-பே) மூலம் கைமாறிய லஞ்சப் பணம் ரூ.8 லட்சத்தை கண்டுபிடித்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் சத்யராஜ் தலைமையில், உதவி ஆய்வாளா் அருண்ராஜ் மற்றும் 8 போ் கொண்ட குழுவினா் சின்னசேலம் பேரூராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை காலை முதல் சோதனை நடத்தினா். சுமாா் 7 மணி நேரம் நீடித்த இந்த சோதனையில், பேரூராட்சி பணியாளா் கைப்பேசியை ஆய்வு செய்ததில் ஜி-பே மூலம் ரூ.8 லட்சம் பெற்றுள்ளதைக் கண்டுபிடித்தனா். இதுகுறித்து போலீஸாா் தொடா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.