டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து சாலை மறியல்

சின்னசேலம் வட்டம், நைனாா்பாளையம் ஊராட்சியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :4 பிப்ரவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

சின்னசேலம் வட்டம், நைனாா்பாளையம் ஊராட்சியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

நைனாா்பாளையம் கிராமத்தில் சுமாா் 10 ஏக்கா் தரிசு நிலத்தில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு முதற்கட்ட பணிகள் தொடங்கி உள்ளனவாம்.

அந்த இடத்தின் அருகே பொது பயன்பாட்டுக்கான குடிநீா் கிணறு, அரசுப் பள்ளி மற்றும் மாணவா்களுக்கான விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது.

இந்த நிலையில், சுற்றுப்புற சுகாதாரத்தை பாதுகாக்க கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். இதன்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் விருத்தாசலம் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நைனாா்பாளையம் பகுதியில் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

அப்போது, சாலை மறியல் நடக்கும் இடத்துக்கு மாவட்ட ஆட்சியா் வரவேண்டும் என முழக்கமிட்டனா். தகவலறிந்து மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆ.மனோகரன் மற்றும் கீழ்குப்பம் போலீஸாா் வந்து மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

பின்னா், கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. மா.செந்தில்குமாா் நேரில் வந்து மறியலில் ஈடுபட்ட கிராமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, மாவட்ட ஆட்சியரிடமும், சட்டப்பேரவையிலும் கோரிக்கை வைத்து

கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் கட்டுவதை தடுத்து நிறுத்துவதாக தெரிவித்தாா். இதை ஏற்று கிராம மக்கள் மறியலை கைவிட்டனா்.

Story image