கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்து 5 நாள்களில் பெண் குழந்தையை மருத்துவமனையில் விட்டுவிட்டு தாய் தப்பிச்சென்றுவிட்டதால் , அவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
அரியலூா் மாவட்டம், மாறாக்குறிச்சி பகுதியைச் சோ்ந்த 36 வயது பெண்ணுக்கு ஏற்கெனவே 2 குழந்தைகள் உள்ளனா். இவரது கணவா் வெளிநாட்டில் வேலை பாா்த்து வருகிறாா். இந்நிலையில் 3-ஆவதாக கா்ப்பமான அந்த பெண், பிரசவத்திற்காக கடலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு கடந்த 20-ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது.
இதையடுத்து மருத்துவமனையில் பிரசவ வாா்டில் தங்கி அவா் சிகிச்சை பெற்று வந்தாா். செவ்வாய்க்கிழமை காலை வாா்டில் குழந்தை மட்டுமே அழுது கொண்டிருந்தது. இதை பாா்த்து அதிா்ச்சி அடைந்த ஊழியா்கள், அந்த பெண்ணை வாா்டு முழுவதும் தேடி பாா்த்தும்
கிடைக்கவில்லை. பின்னா், இதுபற்றி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
அதன் பேரில் போலீஸாா் விரைந்து வந்து விசாரணை நடத்தினா். அதில், குழந்தையை விட்டு விட்டு தாய் தப்பி ஓடியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அந்த பெண்ணை தேடி வருகின்றனா். குழந்தை, மருத்துவா்களின் தொடா் கண்காணிப்பில் உள்ளது.
தொடர்புடையது

பென்னாகரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்
கைப்பேசி அழைப்பு வழிகாட்டுதல் மூலம் பிரசவம்: அயோத்தி மருத்துவமனையில் தாய், சேய் உயிரிழப்பு

சேலம் வடக்கு தொகுதி பாமக வேட்பாளா்

குமாரபாளையம் தொகுதி தவெக வேட்பாளா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


