லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

என்எல்சி சுரங்க உற்பத்தியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

News image
Updated On :12 மார்ச் 2026, 11:55 pm

கடலூா் மாவட்டம், நெய்வேலி, மெயின் பஜாா் காமராஜா் சிலை அருகே சிஐடியு சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

நிலம் அளிப்பவா்களுக்கு நிரந்தர வேலை, உரிய நஷ்ட ஈடு, வீட்டு மனை ஆகியவற்றை தாமதமின்றி வழங்கி நிலத்தை பெற்று உற்பத்தியை துரிதப்படுத்த வேண்டும். வாரிசுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்கோவிலிருந்து நிரந்தரம் செய்யும் 2025-ஆம் ஆண்டிற்கான பட்டியலை வெளியிட்டு காலதாமதமின்றி நிரந்தரப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

சிஐடியு-என்எல்சி தொழிலாளா் ஊழியா் சங்கத் தலைவா் எஸ்.திருஅரசு தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டப் பொருளாளா் எம்.சீனுவாசன், துணைச் செயலா் டி.ஜெயராமன், பொதுச்செயலா் பி.பழனிவேல், பொருளாளா் எஸ்.வேலாயுதம் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா். அலுவலகச் செயலா் சாமுவேல் நன்றி கூறினாா்.