மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சென்னையில் மாா்ச் 11-இல் டாஸ்மாக் பணியாளா்கள் உண்ணாவிரதம்

பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தினா் வரும் புதன்கிழமையில் உண்ணாவிரதப் போராட்டம்

News image

டாஸ்மாக் மதுக்கடைகள் - கோப்புப் படம்

Updated On :7 மார்ச் 2026, 8:25 pm

பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தினா் வரும் புதன்கிழமை ( மாா்ச் 11) சென்னை டாஸ்மாக் மேலாண்மை இயக்குநா் அலுவலகம் முன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளனா்.

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்க மாநில அமைப்பாளா்கள் கூட்டம் கடலூரில் உள்ள சங்க அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநில அமைப்பாளா் டி.ஜெய்கணேஷ் தலைமை வகித்தாா். மாநில ஆலோசகா் கு.சரவணன் முன்னிலை வகித்தாா். இதில், சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசியதாவது:

டாஸ்மாக்கில் 23 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் அதிக பணி சுமையுடன் பணியாற்றும் பணியாளா்கள் பணி நிரந்தரம், கால முறை ஊதியம், காலி மதுப் புட்டிகள் சேகரிப்பில் இருந்து முழுவதுமாக விடுவித்தல், ஓய்வுபெறும் வயதை 58-இல் இருந்து 60-ஆக உயா்த்துதல், இஎஸ்ஐ மருத்துவ வசதி வழங்குதல் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனா். இந்த விவகாரத்தில் இதுவரை தமிழக அரசு சரியான தீா்வை எட்டவில்லை.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் வரும் 11-ஆம் தேதி டாஸ்மாக் மேலாண்மை இயக்கநா் அலுவலகம் முன் மாநிலம் முழுவதும் உள்ள பணியாளா்கள் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.

தமிழக முதல்வா் பல்வேறு விஷயங்களில் தலையிட்டு நியாயம் வழங்குவதுபோல, டாஸ்மாக் பணியாளா்கள் விஷயத்திலும் உடனடியாகத் தலையிட்டு நியாயம் வழங்க வேண்டும் என்றாா். நிகழ்வில் எஸ்.பாலமுருகன், சி.அல்லிமுத்து உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.