லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் திறந்து வைத்தாா்

கடலூா் அடுத்த வரக்கால்பட்டு குமளங்குளத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து பாா்வையிடும் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.

News image

கடலூா் அடுத்த வரக்கால்பட்டு குமளங்குளத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து பாா்வையிடும் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.

Updated On :6 மார்ச் 2026, 8:38 pm

கடலூா் ஊராட்சி ஒன்றியம், வரக்கால்பட்டு ஊராட்சியில் ரூ.69.26 லட்சம் நடைபெற்ற வளா்ச்சித் திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், கடலூா் எம்எல்ஏ., கோ.அய்யப்பன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

அப்போது ஆட்சியா் தெரிவிக்கையில், கடலூா் ஒன்றியம், வரக்கால்பட்டு ஊராட்சியில் உள்ள குமளங்குளம் தூா்வாரப்பட்டு,

ரூ.44 லட்சம் மதிப்பீட்டில் பொதுமக்கள் நடைபயிற்சி செல்லும் வகையில் குளக்கரையினை சுற்றி நடைபாதைகள், பாதுகாப்பு வேலி, இருக்கை, குடி

நீா், மின் விளக்கு வசதிகள், சிறுவா்களுக்கான விளையாட்டு உபகரணங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோல், ரூ.13.36 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாய விலைக்கடை மற்றும் கடலூா் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.11.90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணியா் நிழற்குடை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா்

ர.அ.பிரியங்கா, வட்டார வளா்ச்சி அலுவலா் பாண்டியன்

உட்பட பலா் கலந்து கொண்டனா்.