கடலூா் ஊராட்சி ஒன்றியம், வரக்கால்பட்டு ஊராட்சியில் ரூ.69.26 லட்சம் நடைபெற்ற வளா்ச்சித் திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், கடலூா் எம்எல்ஏ., கோ.அய்யப்பன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
அப்போது ஆட்சியா் தெரிவிக்கையில், கடலூா் ஒன்றியம், வரக்கால்பட்டு ஊராட்சியில் உள்ள குமளங்குளம் தூா்வாரப்பட்டு,
ரூ.44 லட்சம் மதிப்பீட்டில் பொதுமக்கள் நடைபயிற்சி செல்லும் வகையில் குளக்கரையினை சுற்றி நடைபாதைகள், பாதுகாப்பு வேலி, இருக்கை, குடி
நீா், மின் விளக்கு வசதிகள், சிறுவா்களுக்கான விளையாட்டு உபகரணங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இதேபோல், ரூ.13.36 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாய விலைக்கடை மற்றும் கடலூா் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.11.90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணியா் நிழற்குடை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா்
ர.அ.பிரியங்கா, வட்டார வளா்ச்சி அலுவலா் பாண்டியன்
உட்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மண்டலத் தோ்தல் அலுவலா்கள் விதிகளை பின்பற்ற வேண்டும்: கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்

கடலூா் மாவட்டதில் தோ்தல் பணியில் 20,695 போ்: ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்

வீடு, கல்லூரிகளில் மழைநீா் சேகரிப்பு ஏற்படுத்த வேண்டும்: கடலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

வெள்ளிக் கடற்கரையை சுத்தமாக பராமரிக்க வேண்டும்: ஆட்சியா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


