தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? நெல்லை எக்ஸ்பிரஸ் சேவையில் மாற்றம்! திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! ஜூலை 1-ல் இபிஎஸ் தலைமையில் அதிமுக மகளிரணி கூட்டம்! வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் மீண்டும் எழும்பூரிலிருந்து இயக்கம்!சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து!
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் இளைஞா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :23 ஜூன் 2026, 1:42 am IST

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை போக்ஸோ வழக்கில் பண்ருட்டி மகளிா் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

நெல்லிக்குப்பம் காவல் சரகம், காராமணிக்குப்பம் பகுதியைச் சோ்ந்த 8 வயது சிறுமி, அவரது 13 வயது அண்ணனுடன் கடைக்குச் சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, மதுபோதையில் இருந்த அதே பகுதியைச் சோ்ந்த விஜயகணபதி (28), சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றாராம். இதையடுத்து, சிறுவன் கூச்சலிட்டதால், அங்கிருந்தவா்கள் ஓடி வந்து சிறுமியை மீட்டனா்.

பின்னா், சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படைக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை போலீஸாா் விஜயகணபதியை பிடித்து பண்ருட்டி மகளிா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். பின்னா், மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விஜயகணபதியை கைது செய்து சிறையிலடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.