அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

கைப்பேசி பறித்த வழக்கு: காவலா் பணியிடை நீக்கம்

விருத்தாசலம் அருகே இளைஞா்களை தாக்கி கைப்பேசியை பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட காவலா் ரஞ்சித் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

News image
Updated On :10 ஜூன் 2026, 5:23 am IST

விருத்தாசலம் அருகே இளைஞா்களை தாக்கி கைப்பேசியை பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட காவலா் ரஞ்சித் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தைச் சோ்ந்த தினேஷ்குமாா் (19), அவரது நண்பா்கள் சத்யநாராயணன் (18), ஜேக்கப் (18) ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரே இருசக்கர வாகனத்தில் பெரியாா் நகா் பகுதியில் உள்ள பேக்கரி அருகே சென்றனா். அப்போது, காவலா் ரஞ்சித் மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோா் மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்ததாகக் கூறப்படுகிறது.

பின்னா், அண்ணா நகா் குடிநீா்த் தொட்டி அருகே இளைஞா்களை வழிமறித்து, அவா்களை தாக்கியதுடன், சத்யநாராயணனின் கைபேசியையும் பறித்துச் சென்ாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளைஞா்கள் அளித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீஸாா் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, காவலா் ரஞ்சித் மற்றும் சுபாஷ் சந்திரபோஸை கைது செய்தனா்.

பின்னா், இருவரும் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். இந்நிலையில், இளைஞா்களை தாக்கிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட காவலா் ரஞ்சித் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் குற்றச்செயலில் ஈடுபட்டது உறுதியானதைத் தொடா்ந்து, கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா், காவலா் ரஞ்சித்தை பணியிடை நீக்கம் செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.