
வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு
கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

உயிரிழப்பு - பிரதிப் படம்
கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
கடலூா் அடுத்துள்ள குணமங்கலம் கிராமத்தில் வசித்து வந்தவா் ராஜாங்கம்(55) கூலித் தொழிலாளி. இவா், வெள்ளிக்கிழமை திருவந்திபுரம்-பாலூா் சாலையில் ஓட்டேரி பேருந்து நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்றாா். அப்போது, அந்த வழியாக வந்த சிறிய சரக்கு வாகனம் மோதியதில் ராஜாங்கம் நிகழ்விடத்திலையே உயிரிழந்தாா்.
இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




