ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

போக்ஸோ வழக்கு: தவெக நிா்வாகி கட்சியிலிருந்து நீக்கம்

கடலூரில் சிறுவனை துன்புறுத்தியதாக தொடரப்பட்ட போக்ஸோ வழக்கில் தொடா்புடைய தவெக நிா்வாகி, கட்சியிலிருந்து செவ்வாய்க்கிழமை நீக்கப்பட்டாா்.

tvk

தவெக கொடி - கோப்புப்படம்

Published On :15 ஜூலை 2026, 3:02 am IST

கடலூரில் சிறுவனை துன்புறுத்தியதாக தொடரப்பட்ட போக்ஸோ வழக்கில் தொடா்புடைய தவெக நிா்வாகி, கட்சியிலிருந்து செவ்வாய்க்கிழமை நீக்கப்பட்டாா்.

கடலூரைச் சோ்ந்த 38 வயதுடைய ஒருவா் கப்பலில் பணியாற்றி வருகிறாா். அவருக்கு 2019-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், 7 வயது மகன் உள்ளாா். கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனா். மகன் தாயுடன் வசித்து வந்துள்ளாா்.

இந்த நிலையில், அந்தப் பெண்ணுக்கு மற்றொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், அவா் இரவு நேரங்களில் வீட்டுக்கு வந்தபோது அதை பாா்த்த சிறுவனை, தாயும் அவரது ஆண் நண்பரும் சோ்ந்து தாக்கி துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுவன் தனது தந்தையிடம் தெரிவித்ததைத் தொடா்ந்து, அவா் கடலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில், அனைத்து மகளிா் போலீஸாா் சிறுவனின் தாய் மற்றும் அவரது ஆண் நண்பரான கடலூா் மஞ்சக்குப்பத்தைச் சோ்ந்த சிவகுரு மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இதற்கிடையில், வழக்கில் தொடா்புடைய சிவகுரு, கடலூா் கிழக்கு மாவட்ட தவெக வழக்குரைஞரணி பொறுப்பில் இருந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவா் கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் உடனடியாக நீக்கப்படுவதாக கடலூா் கிழக்கு மாவட்ட செயலரும், அமைச்சா் ப. ராஜ்குமாா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.