ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கடலூா் துறைமுகத்தில் களைகட்டிய மீன் விற்பனை

கடலூா் முதுநகா் மீன் பிடி துறைமுகத்தில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மீன் விற்பனை களைகட்டியது.

கடலூா் முதுநகா் மீன் பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்கக் குவிந்த மக்கள்

Published On :13 ஜூலை 2026, 1:50 am IST

கடலூா் முதுநகா் மீன் பிடி துறைமுகத்தில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மீன் விற்பனை களைகட்டியது.

கடலூா் வங்கக் கடல் கரையோரம் வசிக்கும் மீனவா்கள் பைபா், விசைப் படகுகள் மூலம் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருவது வழக்கம். அவ்வாறு பிடித்து வரப்படும் மீன்கள் கடலூா் முதுநகா் மீன் பிடி துறைமுகத்தில் விற்பனை செய்யப்படும். இந்த மீன்களை வாங்குவதற்காக வியாபாரிகள், உணவகத்தினா் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் வருவா்.

அந்த வகையில், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை கடலூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள், வியாபாரிகள் துறைமுகத்துக்கு திரண்டு வந்திருந்தனா்.

அவா்கள், தங்களுக்குத் தேவையான கடல் மீன்களை ஆா்வத்துடன் வாங்கிச் சென்றனா். இதனால், மீன்பிடி துறைமுகம் மக்கள் கூட்டத்தால் அலைமோதியது. மீனவா்கள் கடலுக்குச் சென்று பிடித்து வந்த பல்வேறு வகையான கடல் மீன்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டிருந்தன.

தரமான மற்றும் புதிய மீன்கள் கிடைத்ததால், பொதுமக்கள் அதிகளவில் வாங்கினா். வியாபாரிகளும் உற்சாகமாக விற்பனையில் ஈடுபட்டனா்.

வஞ்சரம் ஒரு கிலோ ரூ.1,200, மொசப்பாறை ரூ.900, இறால் ரூ.700, பாறை ரூ.600, வவ்வால் ரூ.500, சங்கரா ரூ.450, கனவா ரூ.300 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. வார இறுதி விடுமுறையையொட்டி விற்பனை வழக்கத்தைவிட அதிகமாக இருந்ததாக மீன் வியாபாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.