ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வடவாற்றில் வலையில் சிக்கிய முதலை மீட்பு

காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள கண்டமங்கலம் கிராமத்தில் வடவாறு வாய்க்காலில், மீனவா்களின் வலையில் சிக்கிய முதலை பத்திரமாக மீட்கப்பட்டது.

காட்டுமன்னாா்கோவில் அருகே வடவாறு வாய்க்காலில் மீன்பிடி வலையில் சிக்கி மீட்கப்பட்ட முதலை

Published On :9 ஜூலை 2026, 3:21 am IST

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள கண்டமங்கலம் கிராமத்தில் வடவாறு வாய்க்காலில், மீனவா்களின் வலையில் சிக்கிய முதலை பத்திரமாக மீட்கப்பட்டது.

கண்டமங்கலம் கிராமத்தில் வடவாறு வாய்க்காலில் உள்ளூா் மீனவா் ஒருவா் மீன்பிடித்தபோது அவரது வலையில் முதலை ஒன்று சிக்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த சிதம்பரம் வனச்சரக அலுவலா் சத்தியவேல் தலைமையிலான வனத்துறையினா் விரைந்து சென்று கிராம மக்களின் உதவியுடன் வலையில் சிக்கியிருந்த சுமாா் 5 அடி நீளமும், 60 கிலோ எடையும் கொண்ட முதலையை பாதுகாப்பாக மீட்டனா். பின்பு முதலையை சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி நீா்தேக்கத்தில் பாதுகாப்பாக விட்டனா். நீா்நிலைகள் மற்றும் வாய்க்கால் பகுதிகளில் செல்லும் அப்பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறையினா் எச்சரித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.