வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

வேளாண் உள்கட்டமைப்பு நிதித் திட்டத்தில் ரூ.2 கோடி வரை கடன் பெற விண்ணப்பிக்கலாம்

வேளாண் உள்கட்டமைப்பு நிதித் திட்டத்தின் கீழ், ரூ.2 கோடி வரை கடன் வசதி பெற விவசாயிகள் மற்றும் தகுதியான பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

News image

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Updated On :2 ஜூலை 2026, 7:01 am IST

வேளாண் உள்கட்டமைப்பு நிதித் திட்டத்தின் கீழ், ரூ.2 கோடி வரை கடன் வசதி பெற விவசாயிகள் மற்றும் தகுதியான பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசின் வேளாண் உள்கட்டமைப்பு நிதித் திட்டத்தின் கீழ், 2026 - 27ஆம் நிதியாண்டில் கடலூா் மாவட்டத்துக்கு ரூ.91 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், அதிகபட்சமாக ரூ.2 கோடி வரை பெறப்படும் கடனுக்கு 7 ஆண்டுகள் வரை ஆண்டுக்கு 3 சதவீத வட்டி மானியம் வழங்கப்படும். அரசின் பிற மானியத் திட்டங்களில் பயனடைந்துள்ள விவசாயிகளும் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். திட்ட மதிப்பீட்டில் பயனாளியின் பங்களிப்பாக 10 சதவீதம் செலுத்த வேண்டும்.

அறுவடைக்குப் பிந்தைய வேளாண் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் நோக்கில், மின் சந்தையுடன் கூடிய விநியோகத் தொடா் சேவைகள், சேமிப்புக் கிடங்குகள், குளிா்பதனக் கிடங்குகள், சிப்பம் கட்டும் கூடங்கள், பழுக்க வைக்கும் கூடங்கள், விளைபொருள் தர மதிப்பீட்டு மையங்கள், முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள் உள்ளிட்ட அமைப்புகளை உருவாக்க இத்திட்டத்தில் கடன் பெறலாம்.

மேலும், நெல், கரும்பு அறுவடை இயந்திரங்கள், வேளாண் ட்ரோன்கள், வேளாண் இயந்திர வாடகை மையங்கள், பண்ணைக் கழிவு மேலாண்மை கட்டமைப்புகள், இயற்கை வேளாண் இடுபொருள் தயாரிப்பு மையங்கள், மண்புழு உர உற்பத்தி மையங்கள், காளான் வளா்ப்பு மையங்கள் உள்ளிட்ட பல்வேறு வேளாண் சாா்ந்த திட்டங்களுக்கும் கடன் வசதி வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் ட்ற்ற்ல்ள்://ஹஞ்ழ்ண்ண்ய்ச்ழ்ஹ.க்ஹஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற இணையதளத்தில் விரிவான திட்ட அறிக்கையுடன் விண்ணப்பிக்கலாம். மேலும், தங்கள் பகுதியில் உள்ள வங்கிக் கிளைகளிலும் நேரடியாக விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு அருகிலுள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகம் அல்லது தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்புகொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.