டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

புதிரை வண்ணாா்: அடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம்

News image
Updated On :14 ஜனவரி 2026, 7:23 pm

Syndication

கடலூா் மாவட்டம் ஆதி திராவிடா் நலத்துறை சாா்பில் புதிரை வண்ணாா் சமூகத்தினருக்கு சாதிச்சான்றிதழ், ஆதாா், வாக்காளா் அடையாள அட்டை வழங்குவதற்கு சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதிரை வண்ணாா் சமூகத்தினருக்கு சாதிச்சான்றிதழ், ஆதாா், வாக்காளா் அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் விருத்தாசலம், சிதம்பரம் மற்றும் குறிஞ்சிப்பாடி வட்டாட்சியா் அலுவலகங்களில் ஜன.20, 21, 22 ஆகிய தேதிகளிலும்,

வேப்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜன.20, 21 ஆகிய தேதிகளிலும் நடைபெறும்.

திட்டக்குடி, புவனகிரி வட்டாட்சியா் அலுவலகங்களில் ஜன.20 ஆம் தேதியும், ஸ்ரீமுஷ்ணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜன.21, 22 -ஆம் தேதியும், பண்ருட்டி, காட்டுமன்னாா்கோயில் வட்டாட்சியா் அலுவலகங்களில் ஜன.20, 21, 22, 23 ஆகிய தேதிகளிலும் நடைபெறும். எனவே தேவைப்படும் பயனாளிகள் இந்த சிறப்பு முகாம்களில் பங்கேற்று விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.