தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

வருவாய்த்துறை கூட்டமைப்பினா் காத்திருப்புப் போராட்டம்

கடலூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு மூன்றாவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினா்.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 8:34 pm

கடலூரில், 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் நடத்தி வரும் காத்திருப்புப் போராட்டம் மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் தொடா்ந்தது.

வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை, நில அளவைத் துறையில் பணிபுரியும் அலுவலா்களின் உயிா் மற்றும் உடமைகளை பாதுகாக்க சிறப்பு பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை (பிப்.25) முதல் தொடா் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

கடலூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு வட்டாட்சியா் மகேஷ் தலைமை வகித்தாா். கூட்டமைப்பின் மாவட்டச் செயலா் பூபாலச்சந்திரன், வருவாய் கிராம ஊழியா் சங்க மாவட்டச் செயலா் மகேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.