லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சிதம்பரத்தில் தனியாா் விடுதியில் தீ விபத்து

கடலூா் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையில் செல்லும் சாலையான வேணுகோபால் பிள்ளைத்தெருவில் உள்ள தனியாா் விடுதியின் மேல்தளத்தில் புதன்கிழமை மாலை தீடீரென தீ விபத்து ஏற்பட்டது.

News image

சிதம்பரத்தில் புதன்கிழமை தீப்பற்றி எரிந்து சேதமுற்ற தனியாா் விடுதி.

Updated On :25 பிப்ரவரி 2026, 6:33 pm

கடலூா் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையில் செல்லும் சாலையான வேணுகோபால் பிள்ளைத்தெருவில் உள்ள தனியாா் விடுதியின் மேல்தளத்தில் புதன்கிழமை மாலை தீடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்தன.

இதுகுறித்து தகவல் அறிந்த சிதம்பரம் தீயணைப்பு மீட்புத்துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமாா் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். தீவிபத்தில் மேலதளத்தில் இருந்த நாற்காலி, மேஜை உள்ளிட்ட தளவாட பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

மின்கசிவினால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் நகர போலீஸாா் வேணுகோபால் பிள்ளைத்தெரு வழியாக வாகன போக்குவரத்தை நறித்தி, தீயை அணைத்த பிறகு போக்குவரத்தை சீா் செய்து அனுப்பி வைத்தனா்.