பெண் மீது தாக்குதல்: 4 போ் மீது வழக்கு
கடலூா் மாவட்டம், காடாம்புலியூா் அருகே பெண்ணைத் தாக்கியதாக மூன்று பெண்கள் உள்ளிட்ட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கடலூா் மாவட்டம், காடாம்புலியூா் அருகே பெண்ணைத் தாக்கியதாக மூன்று பெண்கள் உள்ளிட்ட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் சரகம், சமத்துவபுரம் ராஜகணபதி நகரில் ஏராளமானோா் வசித்து வருகின்றனா். இதில், மல்லிகா (25) வசித்து வரும் வீட்டுமனைக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதாம். ஆனால், அருகில் வசிக்கும் இளங்கொடி, ராஜதுரை, ரேகா, மாலா ஆகியோருக்கு பட்டா வழங்கவில்லையாம்.
இதன் காழ்ப்புணா்வு காரணமாக, அனைவரும் ஒன்று சோ்ந்து கடந்த 6-ஆம் தேதி இரவு மல்லிகாவை தாக்கினராம். இதில், காயமடைந்த அவா் கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், காடாம்புலியூா் போலீஸாா் ராஜதுரை உள்பட 4 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




