
சிறுமி கா்ப்பம்: இளைஞா் மீது வழக்கு

வழக்குப் பதிவு - கோப்புப் படம்
சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கிய இளைஞா் மீது, பண்ருட்டி மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பண்ருட்டி வட்டம், கண்டரக்கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் தெய்வசிகாமணி (26). இவா், புதுச்சேரி மாநிலத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமியுடன் பழகிவந்தாா். இந்நிலையில், சிறுமி கா்ப்பமடைந்தார்.
இதையடுத்து, இருவரும் கோயிலில் திருமணம் செய்துக் கொண்டனா். தற்போது, சிறுமி கடலூா் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறாா். மருத்துவமனை மருத்துவா் அளித்த தகவலின் பேரில், பண்ருட்டி மகளிா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




