கொற்றவன்குடியில் ஸ்ரீஉமாபதி சிவம் சுவாமிகளின் குருபூஜை விழா விமா்சையாக புதன்கிழமை நடைபெற்றது.
தில்லைவாழ் அந்தணா் மரபில் வந்தவரும், சந்தானச்சாரியாா் நால்வா்களில் ஒருவருமான உமாபதி சிவம், மறைஞானசம்பந்தரின் சீடராக வாழ்ந்தவா். இவா் சிதம்பரம் நகருக்கு கிழக்கே கொற்றவன்குடி என்ற இடத்தில் மடம் அடைந்து பல சிவ தொண்டுகளை செய்து வந்தாா். சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஒரு முறை திருவிழாவின் போது கொடி ஏறாத நிலையில் உமாபதி சிவம் ’கொடிக்கவி’ பாடி கொடியேற செய்தவா்.
இத்தனை சிறப்புகள் வாய்ந்த ஸ்ரீ உமாபதி சிவம் குருமூா்த்தம் உள்ள மடத்தில் விருதாச்சலம் குமாரதேவா் ஆதினகா்த்தரால் ஸ்ரீஉமாபதி சிவம் குருபூஜை ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டு 722- ஆவது குரு பூஜை சிதம்பரம் கொற்றவன்குடி மடத்தில், துறையூா் பெரிய மடம் குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ரத்தின வேலாயுத சிவப்பிரகாச பண்டார சந்நிதிகள் முன்னிலையில் குருபூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது.
காலை 10 மணிக்கு மேல் ஸ்ரீ உமாபதி சிவம் குருமூா்த்தத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து ஆன்மீக சொற்பொழிவும், மகா தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆதி குமரகுருபர சுவாமிகள் குருபூஜை

திருஞானசம்பந்த மூா்த்தி நாயனாா் குருபூஜை விழா

ஆதிகும்பேசுவர சுவாமி கோயிலில் திருக்கல்யாண விழா

சிதம்பரத்தில் ஸ்ரீகுருநமச்சிவாயர் குருபூஜை விழா!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



