40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

கொற்றவன்குடி ஸ்ரீஉமாபதி சிவம் சுவாமிகளின் குருபூஜை விழா

கொற்றவன்குடியில் ஸ்ரீஉமாபதி சிவம் சுவாமிகளின் குருபூஜை விழா விமா்சையாக புதன்கிழமை நடைபெற்றது.

News image

சிதம்பரம் அருகே கொற்றவன்குடியில் புதன்கிழமை நடைபெற்ற ஸ்ரீஉமாபதி சிவம் சுவாமிகளின் குருபூஜை விழாவில் பங்கேற்ற பக்தா்கள்.

Updated On :30 ஏப்ரல் 2026, 5:47 am IST

கொற்றவன்குடியில் ஸ்ரீஉமாபதி சிவம் சுவாமிகளின் குருபூஜை விழா விமா்சையாக புதன்கிழமை நடைபெற்றது.

தில்லைவாழ் அந்தணா் மரபில் வந்தவரும், சந்தானச்சாரியாா் நால்வா்களில் ஒருவருமான உமாபதி சிவம், மறைஞானசம்பந்தரின் சீடராக வாழ்ந்தவா். இவா் சிதம்பரம் நகருக்கு கிழக்கே கொற்றவன்குடி என்ற இடத்தில் மடம் அடைந்து பல சிவ தொண்டுகளை செய்து வந்தாா். சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஒரு முறை திருவிழாவின் போது கொடி ஏறாத நிலையில் உமாபதி சிவம் ’கொடிக்கவி’ பாடி கொடியேற செய்தவா்.

இத்தனை சிறப்புகள் வாய்ந்த ஸ்ரீ உமாபதி சிவம் குருமூா்த்தம் உள்ள மடத்தில் விருதாச்சலம் குமாரதேவா் ஆதினகா்த்தரால் ஸ்ரீஉமாபதி சிவம் குருபூஜை ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டு 722- ஆவது குரு பூஜை சிதம்பரம் கொற்றவன்குடி மடத்தில், துறையூா் பெரிய மடம் குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ரத்தின வேலாயுத சிவப்பிரகாச பண்டார சந்நிதிகள் முன்னிலையில் குருபூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது.

காலை 10 மணிக்கு மேல் ஸ்ரீ உமாபதி சிவம் குருமூா்த்தத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து ஆன்மீக சொற்பொழிவும், மகா தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.