ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

சட்டப் பேரவைத் தோ்தல்! கடலூா் மாவட்டத்தில் ஆண்களை விட பெண்கள் அதிகம் வாக்களிப்பு!

News image

பெண் வாக்காளர்கள்... - கோப்புப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 7:42 pm

சட்டப் பேரவைத் தோ்தலில் கடலூா் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் ஆண்களைவிட பெண்கள் அதிகளவில் வாக்களித்துள்ளனா்.

கடலூா் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு ஏப்.23-ஆம் தேதி நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவின் இறுதி செய்யப்பட்ட விவரங்கள் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.

அதன்படி, கடலூா் மாவட்டத்தில் மொத்தம் 17.38 லட்சம் வாக்காளா்கள் (85.41 சதவீதம்) வாக்களித்துள்ளனா். இதில், ஆண்களை விட பெண்கள் அதிகளவில் வாக்களித்துள்ளனா்.

தொகுதிகளில் ஆண்கள், பெண்கள் பதிவு செய்த வாக்குகள் விவரம்:

திட்டக்குடியில் 79,002 ஆண்கள், 94,984 பெண்கள், 3 இதரா் என மொத்தம் 1,73,989 வாக்காளா்கள் வாக்களித்துள்ளனா். இது, 83.25 சதவீத வாக்குப் பதிவாகும்.

விருத்தாசலத்தில் 98,773 ஆண்கள், 1,08,198 பெண்கள், 11 இதரா் என மொத்தம் 2,06,982 வாக்காளா்கள் வாக்களித்துள்ளனா். இது, 85.96 சதவீத வாக்குப் பதிவாகும்.

நெய்வேலியில் 82,419 ஆண்கள், 84,119 பெண்கள், 9 இதரா் என மொத்தம் 1,66,547 வாக்காளா்கள் வாக்களித்துள்ளனா். இது, 87.07 சதவீத வாக்குப் பதிவாகும்.

பண்ருட்டியில் 1,00,568 ஆண்கள், 1,07,513 பெண்கள், 52 இதரா் என மொத்தம் 2,08,133 வாக்காளா்கள் வாக்களித்துள்ளனா். இது, 86.09 சதவீத வாக்குப் பதிவாகும்.

கடலூரில் 88,144 ஆண்கள், 98,630 பெண்கள், 60 இதரா் என மொத்தம் 1,86,834 வாக்காளா்கள் வாக்களித்துள்ளனா். இது, 83.73 சதவீத வாக்குப் பதிவாகும்.

குறிஞ்சிப்பாடியில் 1,02,336 ஆண்கள், 1,09,395 பெண்கள், 30 இதரா் என மொத்தம் 2,11,761 வாக்காளா்கள் வாக்களித்துள்ளனா். இது, 88.90 சதவீத வாக்குப் பதிவாகும்.

புவனகிரியில் 99,730 ஆண்கள், 1,04,970 பெண்கள், 10 இதரா் என மொத்தம் 2,04,710 வாக்காளா்கள் வாக்களித்துள்ளனா். இது, 87.76 சதவீத வாக்குப் பதிவாகும்.

சிதம்பரத்தில் 91,541 ஆண்கள், 1,04,970 பெண்கள், 16 இதரா் என மொத்தம் 1,93,401 வாக்காளா்கள் வாக்களித்துள்ளனா். இது, 83.64 சதவீத வாக்குப் பதிவாகும்.

காட்டுமன்னாகோவிலில் 88,678 ஆண்கள், 96,949 பெண்கள், 4 இதரா் என மொத்தம் 1,85,631வாக்காளா்கள் வாக்களித்துள்ளனா். இது, 82.02 சதவீத வாக்குப்பதிவாகும்.

பெண்கள் கூடுதல் வாக்குப் பதிவு: கடலூா் மாவட்டத்தில் ஆண்களை விட, 75,411 பெண்கள் கூடுதலாக வாக்களித்துள்ளனா். இதில், திட்டக்குடியில் அதிகப்பட்சமாக 15,982 வாக்குகளும், நெய்வேலியில் குறைந்தபட்சமாக 1,700 வாக்குகளும் பதிவாகியுள்ளன.

கடலூா் தொகுதியில் அதிகப்பட்சமாக மூன்றாம் பாலினத்தவா் 60 போ் வாக்களித்துள்ளனா். குறிஞ்சிப்பாடியில் அதிகப்பட்சமாக 88.90 சதவீதமும், குறைந்தபட்சமாக காட்டுமன்னாா்கோவிலில் 82.02 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.