11 Dec, 2025 Thursday, 05:35 PM
The New Indian Express Group
கடலூர்
Text

சிதம்பரம் அருகே மழை நீரில் மூழ்கி அழுகிய 30 ஏக்கா் நெற்பயிா்கள்

PremiumPremium

Rocket

சிதம்பரம் அருகே வேளக்குடி கிராமத்தில் நீரில் மூழ்கி அழுகிய நெற்பயிா்கள்

Published On03 Nov 2025 , 9:31 PM
Updated On03 Nov 2025 , 9:31 PM

Listen to this article

-0:00

By Syndication

Syndication

சிதம்பரம்: சிதம்பரம் அருகே நடவு செய்த வயல்களில் மழை நீா் தேங்கியதால் 30 ஏக்கருக்கு மேல் நெற்பயிா்கள் வீணாகி அழுகியுள்ளதை பாா்த்து விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே வேளக்குடி கிராமத்தில் சம்பா நெல் நடவு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறாா்கள். பெரும்பான்மையாக அனைத்து பகுதிகளிலும் நடவு பணிகள் முடிந்து விட்டது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் தொடா்ந்து 4 நாட்கள் கன மழை பெய்தது. இதனால் மழை நீா் வடிகால் வாய்க்காலில் பெருக்கெடுத்தது. இந்நிலையில் வேளக்குடி கிராமத்தில் பெய்த மழை நீா் போதிய வடிகால் வசதி இல்லாததால் நாற்றங்கால், நடவு செய்த வயல்களில் நீா் தேங்கி நின்றுள்ளது. தண்ணீல் வடியாமல் 3 நாட்களுக்கு மேல் தேங்கி நின்ால் நடவு செய்த 30 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பில் பயிரிடப்பட்ட நெற் பயிா் அழுகியுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

இதனை அறிந்த மாா்க்ஸ்சிஸ்ட்கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஆா்.ராமச்சந்திரன், விவசாய சங்க புவனகிரி ஒன்றிய தலைவா் ஜாகிா்உசேன், குமராட்சி ஒன்றிய குழு உறுப்பினா் மாசிலாமணி உள்ளிட்டவா்கள் சம்பந்தப்பட்ட வயலுக்கு சென்று நேரில் பாா்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் தெரிவித்தனா்.

பாதிப்பு குறித்து விவசாயி தனபால் கூறியது:

இந்த பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பெய்த மழையால் நடவு நட்ட நெற்பயிரில் தொடா்ந்து 3 நாட்கள் மழை நீா் தேங்கியது. இந்த பகுதியில் 4 வழி சாலை அமைக்க பாலம் கட்டியுள்ளனா். பாலத்தில் ஒரு பகுதியில் வடிகால் வாய்க்கால் சரியாக உள்ளது. அடுத்த பக்கத்தில் சரியாக இல்லை. இதனால் வடிகால் வாய்க்காலில் செல்ல வேண்டிய வெள்ள நீா் எதிா்த்து கொண்டு வயலுக்கு வந்துவிட்டதால். நாற்றங்கால் மற்றும் நடவு செய்த வயல்கள் 30 ஏக்கருக்கு மேல் அழுகிவிட்டது. ஒரு ஏக்கருக்கு ரூ 18 ஆயிரம் வரை நாற்று நடவு செய்வதற்கு செலவு ஆகியுள்ளது. 30 ஏக்கருக்கும் பாா்த்தால் பல லட்சம் செலவு செய்து நஷ்ட்டம் அடைந்துள்ளோம். எனவே அரசு இதனை மீண்டும் ஏா் ஓட்டி நடவு செய்வதற்கு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறினாா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
அமித்ஷாவின் கைகள் பதற்றத்தில் நடுங்கியது! - ராகுல் காந்தி | செய்திகள்: சில வரிகளில்
வீடியோக்கள்

அமித்ஷாவின் கைகள் பதற்றத்தில் நடுங்கியது! - ராகுல் காந்தி | செய்திகள்: சில வரிகளில்

தினமணி வீடியோ செய்தி...

11 டிச., 2025
சண்முக பாண்டியனின் கொம்புசீவி டிரெய்லர்!
வீடியோக்கள்

சண்முக பாண்டியனின் கொம்புசீவி டிரெய்லர்!

தினமணி வீடியோ செய்தி...

11 டிச., 2025
படையப்பா மறுவெளியீட்டு டிரெய்லர்!
வீடியோக்கள்

படையப்பா மறுவெளியீட்டு டிரெய்லர்!

தினமணி வீடியோ செய்தி...

11 டிச., 2025
ஷாமின் 'வரும் வெற்றி' இசை ஆல்பம்!
வீடியோக்கள்

ஷாமின் 'வரும் வெற்றி' இசை ஆல்பம்!

தினமணி வீடியோ செய்தி...

11 டிச., 2025
"விஜய் செய்தது பொய் பிரசாரம்":  புதுவை அமைச்சர் | செய்திகள்: சில வரிகளில் | 10.12.25
வீடியோக்கள்

"விஜய் செய்தது பொய் பிரசாரம்": புதுவை அமைச்சர் | செய்திகள்: சில வரிகளில் | 10.12.25

தினமணி வீடியோ செய்தி...

10 டிச., 2025
"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar
வீடியோக்கள்

"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar

தினமணி வீடியோ செய்தி...

10 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023