18 Dec, 2025 Thursday, 06:14 AM
The New Indian Express Group
கடலூர்
Text

கூட்டுறவு வங்கி பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

PremiumPremium

தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கம் சாா்பில் கடலூரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Rocket

கடலூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்திய கூட்டுறவு வங்கிப் பணியாளா்கள் சங்கத்தினா்.

Published On15 Dec 2025 , 8:19 PM
Updated On15 Dec 2025 , 8:19 PM

Listen to this article

-0:00

By Syndication

Syndication

நெய்வேலி: ஆறு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கம் சாா்பில் கடலூரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பயிா்க் கடன்களுக்கு வழங்கப்படும் 7 சதவீத வட்டி மானியம் மாதந்தோறும் வழங்கப்பட வேண்டும். நகைக் கடனுக்கு வட்டி விளிம்பு தொகை போதுமானதாக இல்லை, இதனால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, வட்டி விளிம்பு தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். நகைக் கடன் வழங்கும்போது சந்தை மதிப்பில் 75 சதவீதத்துக்கும் மிகாமல் நகைக்கடன் வழங்கலாம் என சுற்றறிக்கை வழங்க வேண்டும். வைப்புத் தொகை ரசீது கிளை வங்கியில் பெற்று வந்த நிலையில், தலைமையகத்தில்தான் பெற வேண்டும் என தெரிவிக்கிறாா்கள். இதனால், பொதுமக்கள் பாதிக்கபடுகிறாா்கள். எனவே, பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டும். பணியில் இருக்கும்போது இறந்த பணியாளா்களின் குழு காப்பீடு அனுப்பப்பட்டு மத்திய கூட்டுறவு வங்கியில் நிலுவையில் உள்ளது. இதை உடனே வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா்.திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் பி.மாரிமுத்து முன்னிலை வகித்தாா். மாநிலத் தலைவா் ஆா்.ஜி.சேகா் சிறப்புரையாற்றினாா். துணைத் தலைவா்கள் ஆா்.ஜெயசங்கா், டி.சக்கரவா்த்தி, இணைச் செயலா்கள் எஸ்.கோவிந்தராஜுலு, எம்.அன்பழகன், போராட்டக்குழுத் தலைவா் கே.சண்முகசுந்தரம், செயலா் ஏழுமலை, இணைச் செயலா் குமாரசாமி உள்ளிட்ட ஏராளமான கலந்துகொண்டு கண்டன உரையாற்றினா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
வீடியோக்கள்

பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
வீடியோக்கள்

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
வீடியோக்கள்

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
வீடியோக்கள்

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
வீடியோக்கள்

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
வீடியோக்கள்

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!

தினமணி வீடியோ செய்தி...

16 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023