18 Dec, 2025 Thursday, 06:37 AM
The New Indian Express Group
கடலூர்
Text

குறிஞ்சிப்பாடி அருகே மயான நிலம் மீட்பு

PremiumPremium

Rocket

குறிஞ்சிப்பாடி அருகே கீழ்வடக்குத்து கிராமத்தில் மயான இடத்தை மீட்டு தர கோரி போராட்டம் நடத்த முயற்சித்த மாா்க்சிஸ்ட், விசிக நிா்வாகிகள்.

Published On14 Dec 2025 , 8:49 PM
Updated On14 Dec 2025 , 8:49 PM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

குறிஞ்சிப்பாடி அருகே ஆக்கிரமிக்கப்பட்ட மயான இடம், அரசியல் கட்சிகளின் போராட்ட முன்னெடுப்பை அடுத்து மீட்கப்பட்டது.

குறிஞ்சிப்பாடி அருகே கீழ் வடக்குத்து கிராமத்தில் பட்டியல் சமூகத்தைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு மயான இட வசதி இல்லாததால் சாலையோர புறம்போக்கு இடங்களை பயன்படுத்தி வந்தனா்.

இந்நிலையில், வடக்குத்து கிராமத்தில் வசித்து வந்த சீனிவாசன் (70) என்பவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து அவரது உடலை புறம்போக்கு இடத்தில் புதைக்கச் சென்றபோது, அந்தப் பகுதியில் உள்ள நில உரிமையாளா்கள் அதற்கு எதிா்ப்புத் தெரிவித்தனராம்.

இதையறிந்த மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் கோ.மாதவன், மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலா் வாஞ்சிநாதன், விசிக மாவட்டச் செயலா் நீதிவள்ளல், மாா்க்சிஸ்ட் குறிஞ்சிப்பாடி ஒன்றியச் செயலா் தண்டபாணி, மாவட்டக் குழு உறுப்பினா் சரவணன், மனிதன் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் லெனின் ஆகியோா் அந்த கிராமத்துக்கு சென்றனா்.

அங்கு தனிநபா் ஆக்கிரமிப்பு செய்துள்ள மயான இடத்தை மீட்டு, உடனடியாக அளிக்க வேண்டும் இல்லை என்றால் உடலை அடக்கம் செய்ய மாட்டோம் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட முயன்றனா்.

தகவலறிந்த குறிஞ்சிப்பாடி வட்டாட்சியா் மற்றும் காவல் ஆய்வாளா் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனா். பின்னா், சுடுகாட்டுக்கு அருகே இருக்கிற 17 சென்ட் தரிசு நிலத்தை சுடுகாட்டுக்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கினராம்.

இதனையடுத்து, பொதுமக்கள் சீனிவாசன் உடலை அங்கு அடக்கம் செய்தனா். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய கட்சி நிா்வாகிகளுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
வீடியோக்கள்

பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
வீடியோக்கள்

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
வீடியோக்கள்

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
வீடியோக்கள்

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
வீடியோக்கள்

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
வீடியோக்கள்

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!

தினமணி வீடியோ செய்தி...

16 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023