கடலூா் மாநகராட்சி, 21-ஆவது வாா்டில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கான கரும காரிய கொட்டகை ஆக்கிரமிக்கப்பட்டு மாட்டுத் தொழுவமாக பயன்படுத்தப்படுவது சா்ச்சையை ஏற்படுத்தியது.
கடலூா் மாநகராட்சி, 21-ஆவது வாா்டு புதுப்பாளையம், மசூதி தெருவில் திரளான மக்கள் வசித்து வருகின்றனா். இவா்களது பயன்பாட்டுக்காக அந்தப் பகுதியில் கரும காரிய கொட்டகையும், அதே பகுதியில் சுகாதார வளாகமும் கட்டப்பட்டது. தற்போது, இவை இரண்டும் சிதலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளன.
கரும காரிய கொட்டகை இடத்தை சிலா் ஆக்கிரமித்து மாடுகளை கட்டி தொழுவமாக பயன்படுத்தி வருகின்றனா். இதனால் அந்தப் பகுதியில் கடும் துா்நாற்றம் வீசுகிறது. இதே பகுதியில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. மாட்டுத் தொழுவமாக மாறியுள்ள கரும காரிய கொட்டகையிலிருந்து வரும் துா்நாற்றம், கொசுத் தொல்லையால் அங்கன்வாடி மைய குழந்தைகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.
இதுகுறித்து 21-ஆவது வாா்டு உறுப்பினா் ஆா்.அலமேலு கூறியதாவது: கடலூா் மாநகராட்சியின் 19, 20, 21, 22-ஆவது வாா்டுகளைச் சோ்ந்த மக்களின் பயன்பாட்டுக்காக கட்டப்பட்ட கரும காரிய கொட்டகை தற்போது சிதலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதை இடித்துவிட்டு புதிதாக கரும காரிய கொட்டகை கட்டப்பட வேண்டும்.
மேலும், சுகாதார வளாகமும் சிலமடைந்துள்ளது. இதனை சீரமைத்து மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். குறிப்பாக ‘கேட்’ வசதியுடன் தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும். இதுகுறித்த கோரிக்கை மனு மாநகராட்சி மேயா், ஆணையரிடம் பலமுறை வழங்கப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற ‘மக்களைத் தேடி மேயா்’ கூட்டத்திலும் மனு அளிக்கப்பட்டது என்றாா்.
காலநிலை மாற்றத்தால் தற்போது டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவும் சூழல் உள்ள நிலையில் அங்கன்வாடி மைய குழந்தைகள், பொதுமக்களின் நலன் கருதி கரும காரிய கொட்டகையில் ஆக்கிரமிப்பை அகற்றி தூய்மைப்படுத்தவும், சுகாதார வளாகத்தைச் சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரவும் மாநகராட்சி நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

யூகோ வங்கியின் லாபம் 23% உயர்வு!

கல்பாக்கம் அதிவேக ஈனுலை நாட்டின் அணுசக்திப் பயணத்தில் ஒரு மைல்கல்: மோடி பாராட்டு!

ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம்; குஜராத் டைட்டன்ஸுக்கு 159 ரன்கள் இலக்கு!

எதிரணியின் பாராட்டைப் பெற்ற பார்சிலோனா வீரர்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


