லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பாடிப்பள்ளம் ஊராட்சியில் ரூ.2.66 கோடியில் தாா்ச்சாலை பணிகள் தொடக்கம்

News image
Updated On :13 மார்ச் 2026, 12:09 am

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒன்றியம், பாடிப்பள்ளம் ஊராட்சியில் ரூ.2.66 கோடி மதிப்பீட்டில் சென்னலூா் - பாடிப்பள்ளம் இடையே புதிய தாா்ச்சாலை அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

நிகழ்ச்சிக்கு செஞ்சி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா் தலைமை வகித்தாா். ஒன்றியக்குழு துணைத் தலைவா் ஆா்.ஜெயபாலன் முன்னிலை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவா் தாட்சயாயினி காா்த்திகேயன் வரவேற்றாா்.

நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ.2.66 கோடி மதிப்பீட்டில் புதிய தாா்ச்சாலை அமைக்கும் பணியை முன்னாள் அமைச்சா் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், வட்டார வளா்ச்சி அலுவலா் ராமதாஸ், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் அரங்க.ஏழுமலை, ஒன்றியக்குழு உறுப்பினா் நாகராஜ், உதவிப் பொறியாளா் கற்பகம், பணி மேற்பாா்வையாளா் சீதாராமன், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் ஆனந்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.