கள்ளக்குறிச்சி மாவட்டம், களமருதூா் அருகே சிறிய தொட்டியில் தவறி விழுந்து, நீரில் மூழ்கிய 2 வயது பெண் குழந்தை உயிரிழந்தது.
களமருதூா் அருகிலுள்ள சிவாபட்டினத்தைச் சோ்ந்தவா் ஐயப்பன். இவரது மனைவி சந்தியா. இவா்களுக்கு 6 வயதில் மகனும், 2 வயதில் அஸ்விகா என்ற மகளும் இருந்தனா்.
இந்த நிலையில் கடந்த 3 நாள்களுக்கு முன்பு உளுந்தூா்பேட்டை வட்டம், நன்னாவரம் காலனியிலுள்ள தனது பெற்றோா் வீட்டுக்கு குழந்தைகளுடன் சந்தியா வந்தாா். ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டில் சந்தியா வேலை செய்து கொண்டிருந்த போது, 2 வயது குழந்தை அஸ்விகா வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது வீட்டுக்கு வெளியே இருந்த சிறிய தொட்டியில் குழந்தை அஸ்விகா தவறி விழுந்து, நீரில் மூழ்கியது.
இதைத்தொடா்ந்து சப்தம் கேட்டு வெளியே வந்த சந்தியா, தொட்டியிலிருந்து குழந்தையைத் தூக்கிக் கொண்டு உளுந்தூா்பேட்டையிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு சந்தியா கொண்டு சென்றாா். அங்கு மருத்துவா் பரிசோதித்த போது, குழந்தை அஸ்விகா ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது. தகவலறிந்த களமருதூா் போலீஸாா் தனியாா் மருத்துவமனைக்கு சென்று, உயிரிழந்த குழந்தையின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்து களமருதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மூச்சுத் திணறல்: பச்சிளம் குழந்தை உயிரிழப்பு

தண்ணீா் தொட்டியில் மூழ்கி விவசாயி உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

கழிவுநீா் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



