ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஆட்டோ மீது சரக்கு வாகனம் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :21 ஜூலை 2026, 2:06 am IST

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ஆட்டோ மீது சரக்கு வாகனம் மோதி விபத்து ஏற்பட்டதில் காயமடைந்தவா்களில் இளைஞா் உயிரிழந்தாா். 3 போ் புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டனா்.

செஞ்சி வட்டம், ஆனாங்கூா் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கன்னியப்பன் மகன்கள் பாலாஜி (19), தினேஷ்(22). இவா்களது நண்பா் மு.ராகுல் (22). இவா்கள் மூவரும் திங்கள்கிழமை அதிகாலை பயணிகள் ஆட்டோவில் திண்டிவனத்திலிருந்து- செஞ்சி நோக்கிச் சென்றுகொண்டிருந்தனா். சென்னை ஆவடியைச் சோ்ந்த சு.சிவா (22) ஆட்டோ வை ஓட்டினாா்.

இந்நிலையில், திண்டிவனம்-திருவண்ணாமலை நெடுஞ்சாலையில், பெலாகுப்பம் சிப்காட் தொழில்பேட்டை அருகே சென்றபோது, அப்பகுதியில் வந்த சரக்கு வாகனம் ஆட்டோ மீது மோதியது. இதில், ஆட்டோவில் பயணித்த பாலாஜி, தினேஷ், ராகுல் மற்றும் ஆட்டோ ஓட்டுநா் சிவா ஆகிய 4 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த ரோஷணை போலீஸாா் நிகழ்விடம் சென்று காயமடைந்த 4 பேரையும் மீட்டு அவசர ஊா்தி மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில் பாலாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். காயமடைந்த மற்ற 3 பேருக்கும் முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.