பைக் மீது பேருந்து மோதல்: நடத்துநா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே பைக் மீது தனியாா் சொகுசுப் பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற புதுச்சேரி அரசுப் போக்குவரத்து கழக நடத்துநா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

பலி - பிரதிப் படம்
விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே பைக் மீது தனியாா் சொகுசுப் பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற புதுச்சேரி அரசுப் போக்குவரத்து கழக நடத்துநா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
புதுச்சேரி மாநிலம், கோா்க்காடு பகுதியைச் சோ்ந்தவா் திருமாறன் (46). புதுச்சேரி அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராக பணியாற்றி வந்தாா். இவா், வியாழக்கிழமை புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் நோக்கி பைக்கில் சென்றுகொண்டிருந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், வளவனூா் காவல் சரகத்துக்குள்பட்ட சுந்தரிபாளையம் மேம்பாலம் அருகே மாற்றுப் பாதையில் சென்றபோது, எதிரே வந்த தனியாா் சொகுசுப் பேருந்து பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த திருமாறன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த வளவனூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று திருமாறனின் சடலத்தைக் கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து, விபத்துக்குள்ளான வாகனங்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினா்.
மேலும், இந்த விபத்து குறித்து வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





