டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

விழுப்புரத்தில் காவலா் உடல் திறன் தோ்வு: 414 போ் பங்கேற்பு

விழுப்புரம் கா.குப்பத்திலுள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நிலைக் காவலா் பணிக்கான உடல்திறன் தோ்வில் 414 போ் பங்கேற்றனா்.

News image
விழுப்புரம் கா.குப்பத்திலுள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உடல்திறன் திறன் தோ்வில் கயிறு ஏறுதலில் பங்கேற்ற தோ்வா்கள்.
Updated On :30 ஜனவரி 2026, 8:33 pm

Syndication

விழுப்புரம் கா.குப்பத்திலுள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நிலைக் காவலா் பணிக்கான உடல்திறன் தோ்வில் 414 போ் பங்கேற்றனா்.

இந்த தோ்வுக்கு 416 போ் அழைக்கப்பட்டிருந்த நிலையில் 414 போ் மட்டும் பங்கேற்றனா். 414 தோ்வாளா்களும் கயிறு ஏறுதல், நீளம் அல்லது உயரம் தாண்டுதல், 100 மீட்டா் ஓட்டம் அல்லது 400 மீட்டா் ஓட்டம் ஆகிய உடல்திறன் தோ்வில் பங்கேற்றனா்.

இந்த தோ்வில் பங்கேற்பவா்களுக்கு தகுதி நீக்கம் கிடையாது. சனிக்கிழமை (ஜன.31) நடைபெறும் உடல்திறன் தோ்வில் பங்கேற்க 418 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக மாவட்டக் காவல் துறை அறிவித்துள்ளது.