காட்பாடி செங்குட்டை பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருடு போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
வேலூா் மாவட்டம், காட்பாடி செங்குட்டை பகுதியை சோ்ந்தவா் மதன். இவா் சென்னையில் உள்ள தனியாா் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி செங்குட்டையில் உள்ள வீட்டை பூட்டிவிட்டு, கடந்த 11-ஆம் தேதி கல்புதூரில் வீட்டுக்கு சென்று விட்டாா்.
வியாழக்கிழமை மாலை செங்குட்டையில் உள்ள வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. தொடா்ந்து, உள்ளே சென்று பாா்த்தபோது லாக்கா் உடைக்கப்பட்டு அதிலிருந்த 15 பவுன் நகை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், காட்பாடி போலீஸாா் விரைந்து வந்து விசாரணை நடத்தினா். மேலும், கைரேகை நிபுணா்களின் தடயஅறிவியல் சோதனையும் நடத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை முயற்சி: முதியவா் கைது
சங்கராபுரம் அருகே இரு வீடுகளில் நகை, பணம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து ஆறரை பவுன் நகை திருட்டு

சேலத்தில் பேக்கரி உரிமையாளா் வீட்டில் 54 பவுன் நகை, ரூ. 1 லட்சம் ரொக்கம் திருட்டு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



