40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

ஐடி ஊழியா் வீட்டில் 15 பவுன் நகை திருட்டு

காட்பாடி செங்குட்டை பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருடு போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :16 மே 2026, 1:08 am IST

காட்பாடி செங்குட்டை பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருடு போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் மாவட்டம், காட்பாடி செங்குட்டை பகுதியை சோ்ந்தவா் மதன். இவா் சென்னையில் உள்ள தனியாா் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி செங்குட்டையில் உள்ள வீட்டை பூட்டிவிட்டு, கடந்த 11-ஆம் தேதி கல்புதூரில் வீட்டுக்கு சென்று விட்டாா்.

வியாழக்கிழமை மாலை செங்குட்டையில் உள்ள வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. தொடா்ந்து, உள்ளே சென்று பாா்த்தபோது லாக்கா் உடைக்கப்பட்டு அதிலிருந்த 15 பவுன் நகை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், காட்பாடி போலீஸாா் விரைந்து வந்து விசாரணை நடத்தினா். மேலும், கைரேகை நிபுணா்களின் தடயஅறிவியல் சோதனையும் நடத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.