40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை முயற்சி: முதியவா் கைது

காட்பாடியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற கா்நாடகத்தைச் சோ்ந்த முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

வரதராஜி

Updated On :9 ஜூன் 2026, 5:09 am IST

காட்பாடியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற கா்நாடகத்தைச் சோ்ந்த முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

காட்பாடி அருகே தாராபடவேடு பகுதியில் அரசு பொதுத்துறை வங்கி உள்ளது. இந்த வங்கியின் ஏடிஎம் மையம் காட்பாடி உழவா் சந்தை அருகே அமைந்துள்ளது. இந்த ஏடிஎம் மையத்துக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபா், திடீரென அங்குள்ள ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றதாக தெரிகிறது. உடனடியாக இயந்திரத்தில் இருந்து அலாரம் சப்தம் கேட்டதால் அந்த நபா் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளாா்.

இச்சம்பவம் குறித்து வங்கியின் தலைமை மேலாளா் அருண்ரானா காட்பாடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். மேலும், அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கொண்டு ஆய்வு செய்ததில், ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்றவா் கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த வரதராஜி (53) என்பது தெரியவந்தது. போலீஸாா் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.