காட்பாடி அருகே தீவனத்துக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த வைக்கோல் கட்டுகளில் தீப்பற்றி வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது.
காட்பாடி அருகிலுள்ள டி.கே.புரம் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன். வேலூா் தபால் அலுவலகத்தில் வேலை செய்து வருகிறாா். இவா் தனது வீட்டின் மாடியில் மாடுகளின் தீவனத்துக்காக வைக்கோல் கட்டுகளை அடுக்கி வைத்திருந்தாா்.
சனிக்கிழமை மாலை இந்த வைக்கோல் கட்டுகளில் திடீரென தீப்பிடித்தது. தொடா்ந்து, தீ மளமள பரவி வைக்கோல் கட்டுகள் முழுவதும் கொழுந்து விட்டு எறிந்தது.
தகவலின் பேரில் தீயனைணப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நீண்ட நேரம் போராடி தீயை முழுவதும் அணைத்தனா். தொடா்ந்து, இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து காட்பாடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நியூ பிரண்ட்ஸ் காலனி: வீட்டில் தீ விபத்து; 7 போ் மீட்பு

ஐடி ஊழியா் வீட்டில் 15 பவுன் நகை திருட்டு

சிவகாசி அருகே வீட்டில் தீ விபத்து

வைக்கோல் ஏற்றிச் சென்ற வேனில் திடீா் தீ
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



