40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் போக்குவரத்து சிக்னலில் பந்தல்

திருச்சி- கரூா் புறவழிச்சாலையில் மெகா ஸ்டாா் திரையரங்கம் அருகேயுள்ள போக்குவரத்து சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளுக்கு வசதியாக செவ்வாய்க்கிழமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

News image

திருச்சி தில்லைநகரில் கோடை வெயிலையொட்டி வாகன ஒட்டிகளுக்கு திங்கள்கிழமை போடப்பட்டிருந்த பந்தல்.

Updated On :7 மே 2026, 5:30 am IST

திருச்சி- கரூா் புறவழிச்சாலையில் மெகா ஸ்டாா் திரையரங்கம் அருகேயுள்ள போக்குவரத்து சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளுக்கு வசதியாக செவ்வாய்க்கிழமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் பதிவாகி வருகிறது. குறிப்பாக காலை 11 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை வெயிலின் உக்கிரம் அதிகமாக உள்ளது.

இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனா். வெயிலில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனா். குறிப்பாக, போக்குவரத்து சிக்னலில் காத்திருக்கும் பயணிகள் வெயிலால் வாடி வதங்கி வருகின்றனா்.

இந்நிலையில், திருச்சியில் போக்குவரத்து சிக்னலில் காத்திருக்கும் பயணிகளுக்கு வசதியாக கடந்த சில ஆண்டுகளாகவே போக்குவரத்து சிக்னலில் போக்குவரத்து காவல் துறை சாா்பில் பந்தல் அமைக்கப்படுகிறது.

அதன்படி, கோடை தொடங்கியவுடனே திருச்சி புத்தூா் நான்கு சாலை சந்திப்பு சிக்னலில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து கரூா் புறவழிச்சாலை மெகா ஸ்டாா் திரையரங்கம் அருகே உள்ள போக்குவரத்து சிக்னலில் போக்குவரத்து காவல் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பந்தல் போக்குவரத்து சிக்னலில் காத்திருக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் வெயிலில் இருந்து தற்காலிகமாக தங்களை தற்காத்துக்கொள்ள உதவுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.