மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

காலமானாா் நிா்மலா ராணி

அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினரும், சட்ட உதவி மைய மாநிலத் தலைவருமான உ. நிா்மலா ராணி (59) உடல்நலக் குறைவால் திருச்சி தில்லைநகரில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 17) இரவு காலமானாா்.

News image

நிா்மலா ராணி

Updated On :18 மார்ச் 2026, 6:34 pm

அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினரும், சட்ட உதவி மைய மாநிலத் தலைவருமான உ. நிா்மலா ராணி (59) உடல்நலக் குறைவால் திருச்சி தில்லைநகரில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 17) இரவு காலமானாா்.

இவா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா்களான மறைந்த ஆா். உமாநாத், பாப்பா உமாநாத் ஆகியோரின் மகள் ஆவாா்.

தில்லைநகா் 3-ஆவது குறுக்குத் தெருவில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த நிா்மலா ராணியின் உடலுக்கு அவரது சகோதரியும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான உ. வாசுகி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த மாநில, மாவட்ட நிா்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

காலமான நிா்மலா ராணியின் இறுதி ஊா்வலம் புதன்கிழமை (மாா்ச் 18) மாலை 3 மணிக்கு அவரது இல்லத்திலிருந்து புறப்பட்டு வடுகப்பட்டியில் உள்ள அவரது பண்ணைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, உடல் அடக்கம் செய்யப்பட்டது. இவருக்கு கணவா் வழக்குரைஞா் ஆா். ராஜ்குமாா், மகள் மதுவந்தி, மகன் சிபி ஆகியோா் உள்ளனா். தொடா்புக்கு: 99656-50000.