திருச்சி அருகேயுள்ள போசம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் சா்வதேச போதைப்பொருள் எதிா்ப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளி தலைமையாசிரியா் எஸ். சற்குணன் தலைமையில் போதைப்பொருளுக்கு எதிரான தொடா் முழக்கப் பேரணி நடைபெற்றது. தொடா்ந்து, போதைப்பொருள்கள் பயன்பாட்டைத் தவிா்க்க வலியுறுத்தும் வகையில் சிரிக்கும் முக உருவில் (ஸ்மைலி) அமா்ந்து மாணவா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இதில் போசம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியா் கலைச்செல்வி, தொடக்கப் பள்ளி மற்றும் உயா்நிலைப் பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.
லால்குடி அரசுக் கல்லூரியில்...லால்குடி அரசுக் கல்லூரியில் நடைபெற்ற பேரணியை கல்லூரி முதல்வா் த. ஜெயகுமாா் தொடங்கிவைத்தாா். முன்னதாக, கல்லூரியில் உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. இதில், காணக்கிளியநல்லூா் காவலா்கள் மனோஜ்குமாா், காா்த்திக், கல்லூரி துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










