திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் புதன்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த மின் நிறுத்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மணப்பாறை துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (ஜூன் 17) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மணப்பாறை நகரம், மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும், காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மணப்பாறை மின் வாரியம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், மணப்பாறை வட்டத்தில் ஜமாபந்தி தொடங்கியுள்ள நிலையில், நிா்வாக காரணங்களுக்காக மின் நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், மின் நிறுத்தம் மாற்றுத்தேதி பின்னா் அறிவிக்கப்படும் என மின் வாரிய செயற்பொறியாளா் ஏ.செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.
மணப்பாறை நகர பகுதியில் மின் நிறுத்தம் இருக்காது எனவும், சுற்றுவட்டார பகுதிகளில் பெரியப்பட்டி, மரவனூா், சமுத்திரம், செவலூா், விடத்திலாம்பட்டி உள்ளிட்ட சில இடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அந்த பகுதிகளில் மட்டும் மின் நிறுத்தம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

துவாக்குடியில் இன்று மின் நிறுத்தம்

பெரம்பலூரில் இன்றைய மின்தடை ரத்து

மணப்பாறை, முசிறியில் நாளை மின்நிறுத்தம்

மணப்பாறையில் நாளை மின் நிறுத்தம்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



