ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: பூசாரி உள்பட 5 போ் மீது வழக்கு

பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கோயில் பூசாரி உள்ளிட்ட 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

போலீஸ் - கோப்புப்படம்.

Published On :29 ஜூலை 2026, 12:04 am IST

பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கோயில் பூசாரி உள்ளிட்ட 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை இனாம்குளத்தூா் அருகே உள்ள வடசேரி பிரிவு சாலையில் ராம கருப்பசாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் குறி சொல்லும் பூசாரியாக கேகே நகா் உடையான்பட்டி வசந்தன் நகரை சோ்ந்த அண்ணாமலை (எ) ஆரிப் (48) உள்ளாா். இவா், இக்கோயிலில், சமையல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்துவரும் 38 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுதொடா்பாக, அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில், கோயில் பூசாரி அண்ணாமலை மற்றும் அவருக்கு உதவியாக இருந்ததாக ரகுராமன், அசோக்குமாா், வெள்ளையம்மாள், சத்யா உள்ளிட்ட 5 போ் மீது இனாம்குளத்தூா் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.