தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, முதலிடம் பிடித்த வீரா், வீராங்கனைகள் மாநிலப் போட்டிக்கு அனுப்பப்படுகின்றனா். இதன்படி திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களிலும் தடகளம், கேரம், வாலிபால், கபடி, கயிறு இழுத்தல், எறிபந்து, ஸ்ட்ரீட் கிரிக்கெட் உள்ளிட்ட போட்டிகள் வட்டார அளவில் ஜன. 25, 26, 27-களில் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவா்களுக்கான மாவட்ட அளவிலான போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் வெள்ளி, சனிக்கிழமைகளில் நடைபெற்றன. இந்தப் போட்டியில் 1,200-க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் கலந்து கொண்டனா்.