டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தாம்பரம் - செங்கோட்டை இடையே சிறப்பு ரயில்

News image
சிறப்பு ரயில்- GMSRailway
Updated On :23 ஜனவரி 2026, 9:08 pm

தினமணி செய்திச் சேவை

குடியரசு தினவிழா கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக தாம்பரம் - செங்கோட்டை - தாம்பரம் இடையே சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இதன்படி, தாம்பரம் - செங்கோட்டை சிறப்பு விரைவு ரயிலானது (06137) வரும் 24 -ஆம் தேதியும், செங்கோட்டை - தாம்பரம் சிறப்பு விரைவு ரயிலானது (06138) வரும் 26-ஆம் தேதியும் இயக்கப்பட உள்ளது.

23 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயிலானது தாம்பரத்திலிருந்து இரவு 11.50 மணிக்குப் புறப்பட்டு செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சிவகாசி, வில்லிபுத்தூா், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூா், தென்காசி வழியாக செங்கோட்டைக்கு அடுத்த நாள் முற்பகல் 11.40 மணிக்குச் சென்றடையும்.

மறுமாா்க்கமாக, செங்கோட்டையிலிருந்து பிற்பகல் 3 மணிக்குப் புறப்பட்டு மேற்கண்ட வழித்தடம் வழியாக தாம்பரத்துக்கு அடுத்த நாள் அதிகாலை 3 மணிக்குச் சென்றடையும் என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.