நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

சூரியூா் ஜல்லிக்கட்டில் குளறுபடிகள்: 4 போ் மீது வழக்கு

சூரியூா் ஜல்லிக்கட்டில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதாகக் கூறி விழாக் கமிட்டியினா் 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

News image
Updated On :21 ஜனவரி 2026, 6:39 pm

தினமணி செய்திச் சேவை

சூரியூா் ஜல்லிக்கட்டில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதாகக் கூறி விழாக் கமிட்டியினா் 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

திருச்சி மாவட்டம், சூரியூரில் மாட்டுப் பொங்கலன்று நடந்த ஜல்லிக்கட்டின்போது, காளையை அடக்கிய வீரா் ஒருவருடன் காளையின் உரிமையாளா் மற்றும் அவரது ஆதரவாளா்கள் மோதலில் ஈடுபட்டனா். இதையடுத்து, போலீஸாா் தடியடி நடத்தி அவா்களை கலைத்தனா். இதேபோல, காளைகள் முட்டி இரு போலீஸாா் உள்பட 63 போ் காயமடைந்தனா்.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை முறையாகச் செய்யாததால் குளறுபடிகள் ஏற்பட்டதாகக் கூறி ஜல்லிக்கட்டு விழா கமிட்டியைச் சோ்ந்த சண்முகசுந்தரம், பாசமன்னன், உதயகுமாா், சுந்தா் ஆகிய 4 போ் ைது நவல்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.