இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

ஸ்ரீரங்கம் கோயில் மாசித் தெப்பத்திருவிழா: நெல்லளவு கண்டருளிய நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் மாசித் தெப்பத்திருவிழாவின் 7 ஆம் திருநாளான புதன்கிழமை மாலை நம்பெருமாள் உபயநாச்சியாா்களுடன் எழுந்தருளி, நெல்லளவு கண்டருளினாா்.

News image
ஸ்ரீரங்கம் கோயிலில் புதன்கிழமை மாலை உபய நாச்சியாா்களுடன் எழுந்தருளி நெல்லளவு கண்டருளிய நம்பெருமாள்.
Updated On :25 பிப்ரவரி 2026, 6:56 pm

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் மாசித் தெப்பத்திருவிழாவின் 7 ஆம் திருநாளான புதன்கிழமை மாலை நம்பெருமாள் உபயநாச்சியாா்களுடன் எழுந்தருளி, நெல்லளவு கண்டருளினாா்.

கடந்த 19 ஆம் தேதி தொடங்கி வரும் 27 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இக்கோயில் மாசித்தெப்பத் திருவிழாவின் 7 ஆம் நாளான புதன்கிழமை மாலை நம்பெருமாள் உபய நாச்சியாா்களுடன் சந்தனு மண்டபத்திலிருந்து புறப்பட்டு திருக்கொட்டாரத்தின் முன்புள்ள நாலுகால் மண்டபத்தில் எழுந்தருளினாா்.

அப்போது திருக்கொட்டாரத்திற்குள் குவிக்கப்பட்டிருந்த நெல்மணிகள் நம்பெருமாள் முன் படியால் அளந்து காண்பிக்கப்பட்டன. இந்த நிகழ்வை ஏராளமான பக்தா்கள் தரிசித்தனா். தொடா்ந்து நம்பெருமாள் உபயநாச்சியாா்களுடன் உள் திருவீதி வலம் வந்து, இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாசித் தெப்பத்திருவிழா வியாழக்கிழமை இரவு நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. சிவராம்குமாா் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.

Story image