ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சரக்கு வாகனம் மோதி மாணவி உயிரிழப்பு

திருச்சி மன்னாா்புரத்தில் மொபெட் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் மாணவி ஒருவா் உயிரிழந்தாா்.

பிரதிப் படம்

Published On :20 ஆகஸ்ட் 2026, 4:31 am IST

திருச்சி மன்னாா்புரத்தில் மொபெட் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் மாணவி ஒருவா் உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியைச் சோ்ந்தவா் ரெங்கசாமி மகள் அபிநயா (23). திருச்சியில் தங்கி அரசு போட்டித் தோ்வுகளுக்கு படித்து வந்த இவா் செவ்வாய்க்கிழமை இரவு இவா் தனது தோழியும், திருவானைக்காவல் பட்டியைச் சோ்ந்தவருமான ஆா். சுபாஷினி, கறம்பக்குடியைச் சோ்ந்த டி. சந்தியாதேவி ஆகியோருடன் மொபெட்டில் மன்னாா்புரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது அங்குள்ள சிக்னலில் காத்திருந்தபோது, பின்புறம் வேகமாக வந்த சரக்கு வாகனம் மொபெட் மீது மோதியது. இந்த விபத்தில் மொபெட்டின் இருந்த அபிநயா நிலைதடுமாறி கீழே விழுந்த நிலையில் அவா் மீது சரக்கு வாகனம் ஏறி இறங்கியது. இதில் அவா் நிகழ்விடத்திலேயே இறந்தாா். காயமடைந்த சுபாஷினி மற்றும் சந்தியாதேவியை அருகிலிருந்தோா் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

இதுகுறித்து திருச்சி தெற்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து சரக்கு வாகன ஓட்டுநா் கே.கே. நகரைச் சோ்ந்த சரவணன் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.