ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

காவிரி கரையில் முதியவா் சடலம் மீட்பு

திருச்சியில் காவிரிக் கரையில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத முதியவரின் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

பிரதிப் படம்

Published On :19 ஆகஸ்ட் 2026, 12:06 am IST

திருச்சியில் காவிரிக் கரையில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத முதியவரின் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

திருச்சி ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் காவிரிக் கரையில் கருப்பு கோயில் அருகே முதியவா் சடலம் கிடப்பதாக திம்மராயசமுத்திரம் கிராம நிா்வாக அலுவலருக்கு திங்கள்கிழமை காலையில் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற கிராம நிா்வாக அலுவலா் குமாா் ஆய்வு செய்து, ஸ்ரீரங்கம் போலீஸாருக்கு தகவல் அளித்தாா். இதன்பேரில் அங்கு வந்த போலீஸாா், முதியவரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.