ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.35 கோடி

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 1.35 கோடி செவ்வாய்க்கிழமை கிடைக்கப் பெற்றது.

திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் - கோப்புப்படம்.

Published On :12 ஆகஸ்ட் 2026, 1:25 am IST

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 1.35 கோடி செவ்வாய்க்கிழமை கிடைக்கப் பெற்றது.

பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறை திருச்சி தக்காா் / இணை ஆணையா் சு. ஞானசேகரன், கோயில் இணை ஆணையா் எம். சூரியநாராயணன் ஆகியோா் முன்னிலையில் கோயில் பணியாளா்கள், தன்னாா்வலா்கள், கல்லூரி மாணவிகள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

இதில், முதன்மை திருக்கோயிலில் 1 கோடியே 35 லட்சத்து 29 ஆயிரத்து 593 ரூபாய் ரொக்கம், 0.709 கிராம் தங்கம், 1 கிலோ 998 கிராம் வெள்ளி, வெளிநாட்டு பணத்தாள்கள் 89, வெளிநாட்டு நாணயங்கள் 357 ஆகியவை கிடைக்கப் பெற்றது.

இக்கோயிலில் இதற்கு முன்பு கடந்த 28-ஆம் தேதி உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.