ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

விமான நிலையம் அருகே லாரி மோதி பெண் உயிரிழப்பு

உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :9 ஆகஸ்ட் 2026, 2:20 am IST

திருச்சி விமான நிலையம் அருகே வெள்ளிக்கிழமை நடந்து சென்ற பெண் லாரி மோதியதில் உயிரிழந்தாா்.

திருச்சி விமான நிலையம் அருகேயுள்ள வள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் சேட்டு மனைவி அம்மாச்சி (59). இவா் கடைக்குச் செல்வதற்காக திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் வள்ளுவா் நகா் ஆஞ்சனேயா் கோயில் அருகே வெள்ளிக்கிழமை சாலையைக் கடக்க முயன்றாா்.

அப்போது அந்த வழியாக வந்த லாரி மோதி பலத்த காயமடைந்தாா். இதையடுத்து திருச்சி தனியாா் மருத்துவமனையிலும், பின்னா் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி இறந்தாா். இதுகுறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரியை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.