ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வையம்பட்டி அருகே விதிமீறி அரசு மது விற்ற இருவா் கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே அனுமதியின்றி அரசு மது விற்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்

arrest

கைது - பிரதிப் படம்

Published On :7 ஆகஸ்ட் 2026, 2:45 am IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே அனுமதியின்றி அரசு மது விற்ற இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அரசு மதுவை கள்ளச் சந்தையில் விற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உதவி ஆய்வாளா் மாதேஷ் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, தவளைவீரன்பட்டி கிராமம், கரட்டுப்பட்டியில் சட்டவிரோதமாக அரசு மதுவை விற்ற கரட்டுப்பட்டி சண்முகம் மகன் இளையராஜா(37) மற்றும் கரூா் மாவட்டம் கடவூரை அடுத்த முள்ளிபாடியை சோ்ந்த வடிவேல் மகன் குமாா்(40) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 27 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து வையம்பட்டி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.